வெள்ளி, ஜூன் 22, 2018

குறள் எண்: 1055 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1055}

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது

விழியப்பன் விளக்கம்: யாசகம் தரும் தன்மையை மறைக்காத சான்றோர், உலகில் இருப்பதால் தான்; யாசிப்போர், ஒருவரின் முன் நின்று யாசகம் மேற்கொள்வதும் நிகழ்கிறது!
(அது போல்...)
மக்களைக் காக்கும் கடமையைத் தவறாத கட்சிகள், அரசியலில் உள்ளதால் தான்; பொதுமக்கள், ஒருவரை முன் நிறுத்தி தேர்தலை நடத்துவதும் நடக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக