வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

குறள் எண்: 1111 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1111}

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

விழியப்பன் விளக்கம்: அதிமென்மை கொண்ட அனிச்சம் பூவே! நீ வாழ்வாய்! ஆனால், நான் விரும்பும் என்னவள்; உன்னினும் மென்மையானவள் என்பதையும் உணர்வாயாக!
(அது போல்...)
அதிவலிமை கொண்ட பூமித் தாயே! நீ சிறப்பாய்! ஆனால், நான் வணங்கும் என்னம்மை; உன்னினும் வலிமையானவள் என்பதையும் ஏற்பாயாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக