வெள்ளி, ஆகஸ்ட் 31, 2018

குறள் எண்: 1125 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1125}

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

விழியப்பன் விளக்கம்: கருணையொளி/போர்க்குணம் இரண்டும் வெளிப்படும் விழிகளுயுடைய என்னவளை; மறந்தால் தானே, நான் மீண்டும் நினைப்பன்? அப்படி மறப்பதை, நானறியேன்!
(அது போல்...)
ஞானப்பசி/தேடல்குணம் இரண்டையும் வளர்க்கும் திறமுடைய என்குருவை; விலகினால் தானே, நான் மீண்டும் நெருங்க? அப்படி விலகுவதை, நானறியேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக