செவ்வாய், ஆகஸ்ட் 21, 2018

குறள் எண்: 1115 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1115}

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை

விழியப்பன் விளக்கம்: தன் மென்மையை உணராமல், காம்பு களையாத அனிச்சம் பூவைச்  சூடியதால்; ஒடிந்த என்னவளின் இடுப்புக்காக, மங்களமற்ற இசை ஒலிக்கும்!
(அது போல்...)
தன் கடமையைச் செய்யாமல், ஊழல் கலையாது அரசியல் ஆதாயம் தேடியதால்; இழந்த மக்களின் ஆட்சிக்காக, அறமற்ற தண்டனை கிடைக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக