சனி, ஆகஸ்ட் 18, 2018

குறள் எண்: 1112 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1112}

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

விழியப்பன் விளக்கம்: மலர்களைக் கண்டால், மயங்கும் நெஞ்சமே! இவளின் கண்களும், பலர் கண்டு வியக்கும் பூக்களுக்கு இணையாகும், என்றெண்ணி தான் மயங்குகிறாயோ?
(அது போல்...)
உறவுகளைக் கண்டால், உருகும் மனிதமே! இயற்கையால் பாதிக்கப்பட்டோரும், பலர் உறவாடி உருகும் உறவுகளுக்கு இணையாவர், என்றெண்ணி தான் உருகுகிறாயோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக