வியாழன், ஆகஸ்ட் 23, 2018

குறள் எண்: 1117 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1117}

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

விழியப்பன் விளக்கம்: மறைந்து மீண்டும் தோன்றும் நிலவில் இருக்கும், ஒளிவு குறைந்த இருள் போல்; என்னவளின் ஒளிமிக்க முகத்தில், களங்கம் ஏதுமுண்டோ?... இல்லையே!
(அது போல்...)
ஆவியாகி மீண்டும் பரவும் கடலில் இருக்கும், உப்பு மிகுந்த நீர் போல்; என்னம்மையின் ஒப்பற்ற அன்பில், குறை ஏதுமுண்டோ?... இல்லையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக