புதன், ஆகஸ்ட் 22, 2018

குறள் எண்: 1116 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1116}

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

விழியப்பன் விளக்கம்: ஒளிமிக்க என்னவளின் முகத்தில், மதிமயக்கம் கொண்ட விண்மீன்கள்; நிலவுக்கும்/பெண்முகத்திற்கும் வித்தியாசம் அறியாமல், தன்னிலை மறந்து அலைகின்றன!
(அது போல்...)
புகழ்மிக்க எந்தலைவனின் கடமையில், சித்தம் கலங்கிய எதிர்க்கட்சிகள்; குடும்பத்திற்கும்/மக்களாட்சிக்கும் வித்தியாசம் அறியாமல், தன்கடமை மறந்து இருக்கின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக