திங்கள், ஆகஸ்ட் 20, 2018

குறள் எண்: 1114 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1114}

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

விழியப்பன் விளக்கம்: அழகிய குவளை மலர், என்னவளைக் கண்டால்; சிறந்த அணிகலனாகிய அவள் கண்ணுக்கு ஒப்பமாட்டேன் எனவுணர்ந்து, தலைகுனிந்து நிலம் நோக்கும்!
(அது போல்...)
தேர்ந்த அரசியல் விமர்சகர், நற்தலைவரைக் கண்டால்; உயர்ந்த குணமாகிய அவர் வாய்மைக்கு ஒப்பமாட்டேன் என்றறிந்து, வழிவிட்டு விலகி நிற்பர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக