சனி, ஆகஸ்ட் 25, 2018

குறள் எண்: 1119 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1119}

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

விழியப்பன் விளக்கம்: நிலவே! அழகுமலர் போன்ற விழியுடைய என்னவளின் முகத்திற்கு, நிகராய் இருக்க விரும்பினால்; பலரும் காணும் வண்ணம் தோன்றாதே!
(அது போல்...)
அரசே! அன்புக்குவியல் போன்ற இதயமுடைய என்னம்மையின் பொதுமைக்கு, இணையாய் வளர விரும்பினால்; பலரையும் அழிக்கும் பிரிவினையைக் கைவிடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக