திங்கள், அக்டோபர் 02, 2017

குறள் எண்: 0792 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்; குறள் எண்: 0792}

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்

விழியப்பன் விளக்கம்: மீண்டும் மீண்டும் ஆராயமல், ஒருவர் கொள்ளும் நட்பு; இறுதியில், அவருக்கு மரணத்தை ஒத்த துயரத்தை அளிக்கும்!
(அது போல்...)
மீண்டும் மீண்டும் களையெடுக்காமல், ஒருவர் செய்யும் விவசாயம்; முடிவில், அவருக்கு பண-மதிப்பிழப்பை ஒத்த நட்டத்தை அளிக்கும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக