ஞாயிறு, அக்டோபர் 15, 2017

குறள் எண்: 0805 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0805}

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்

விழியப்பன் விளக்கம்: நண்பர்கள் வருந்தும் செயல்களைச் செய்தால், அறியாமை ஒன்றே காரணமாகுமா? மாறாய், பழமையால் விளைந்த பேருரிமையே காரணமென உணர்வீர்!
(அது போல்...)
அரசியலார் கொடுங்கோல் ஆட்சியைச் செய்தால், அதிகாரம் ஒன்றே காரணியா? மாறாய், பழையகட்சி என்பதற்காக ஓட்டளித்ததே காரணியென உணர்வோம்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக