செவ்வாய், அக்டோபர் 10, 2017

விந்தை சமுதாயம் இது...


ஆணினம் குட்டைக் கால்சட்டை
அணிந்தால், "அசிங்கம்" என்போர்;
பெண்ணினம் குட்டைப் பாவாடை
அணிந்தால், "அழகு" என்பர்!
அதையே சீருடையாகவும் வைப்பர்!
பார்வை - உடையிலா? உடலிலா?
விந்தை சமுதாயம் இது!

ஆணினம் கள்ளத் தொடர்பில்
இணைந்தால், “வீரனவன்” என்போர்;
பெண்ணினம் கள்ளத் தொடர்பில்
இணைந்தால், “விபச்சாரி” என்பர்!
அதையே ஒழுங்கீனமெனவும் உரைப்பர்!
பார்வை - உறவிலா? உணர்விலா?
விந்தை சமுதாயம் இது!

ஆணினம் குடும்ப பொருளாதாரத்தில்
பங்கிட்டால், “சமர்த்தானவன்” என்போர்;
பெண்ணினம் குடும்ப பொருளாதாரத்தில்
பங்கிட்டால், “சம்பாதிக்கும்திமிர்” என்பர்!
அதையே நியாயமென்றும் வாதிடுவர்!
பார்வை - பணத்திலா? பாலினத்திலா?
விந்தை சமுதாயம் இது!

ஆணினம் மதுவருந்தும் புகைப்படம்
வெளியானால் “சூப்பர்-மச்சான்” என்போர்;
பெண்ணினம் மதுவருந்தும் புகைப்படம்
வெளியானால் “ஐட்டம்-மச்சான்” என்பர்!
அதையே கலாச்சார-அழிவென கொக்கரிப்பர்!
பார்வை - மதுவிலா? மாதுவிலா?
விந்தை சமுதாயம் இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக