சனி, அக்டோபர் 14, 2017

குறள் எண்: 0804 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0804}

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்

விழியப்பன் விளக்கம்: நெடுநாள் பழகிய உரிமையில், தம்மைக் கேட்காமல் நண்பர்கள் செய்த விருப்பமற்ற செயல்களை; பழைமையின் பெருமையை உணர்ந்தோர், பொறுத்துக் காப்பர்!
(அது போல்...)
நெடுங்காலம் பணிபுரிந்த உரிமையில், தம்மை ஆலோசிக்காமல் மேலாளர்கள் எடுக்கும் சரியற்ற முடிவுகளை; பொருளாதாரத் தேவையை அறிந்தோர், விரும்பி ஏற்பர்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக