புதன், ஜூலை 08, 2015

நம் வரையறை உணர்வோம் - 1


{தன் கணவன் "தனக்கு மட்டும்தான் சொந்தம்" என்றென்னும் பெண்களுக்காய்!!}


   குறைந்தது 25-ஆண்டுகளாவது ஒரு ஆண்மகனை வளர்த்து ஆளாக்க, அவனுடைய பெற்றோர்களும்; அவனின் உடன்-பிறந்தோரும் பலவிதத்தில் உதவி செய்திருப்பர்! பல தியாகங்களை செய்திருப்பர். தம் வளர்ச்சியை கூட மட்டுப்படுத்திக் கொண்டு, அவன் வளர்ச்சியை ஒரு பொருட்டாய் மதித்திருப்பர். அப்படிப்பட்ட ஒருவன், தான் வளர்ந்து ஆளான தருணத்தில் - உங்களுக்கு கணவனாய் ஆகிவிட்ட "ஒரேயொரு காரனத்தினாலாயே!" - அவனை வளர்த்து ஆளாக்கிய எல்லோரையும் மறந்துவிட்டு/ஒதுக்கிவிட்டு "உங்களோடு மட்டும்" இருத்திக் கொள்ள நினைத்தல் எந்த விதத்தில் நியாயமாகும்?! 
  • ஒரு மரம் கூட தன்னை வளர்த்தவர்களுக்கு - காயாகவோ/கனியாகவோ/இலை-தழைகளின் மூல உரமாகவோ/குறைந்தது-அடுப்பெரிக்க உதவும் விறகாகவோ பயன்படுகிறது. ஆனால், ஆறறிவு கொண்ட மனிதனை இப்படி ஏதுமொரு (பிரதி)உதவியும் செய்யாமல் அவனை "வேறுபடுத்தல்" எங்கனம் நியாயமாகும்?
  • உங்களுக்கு வேண்டியதை உங்கள் கணவனிடம் கேட்டுப் பெற உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. அப்படி செய்ய இயலாத/முயலாத கணவனை நீங்கள் குறைகூறுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், உங்களுக்கு தேவையான அனைத்தையும் "தேவைக்கு மேலேயே" செய்யும் ஒரு கணவனை "அவனை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு" - தன் கடனை திரும்ப செய்யாவண்ணம் தடுத்தல் எந்த விதத்தில் நியாயமாகும்? அதற்கு, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது??
  • மனிதாபிமானம்-அற்ற/மானம்-கெட்ட/சுயநலத்தை-தற்குறியாய் கொண்ட - ஆண் மக்களுக்கு வேண்டுமானால் அது சாத்தியம் ஆகக்கூடும்! ஆனால், உண்மையான ஒரு ஆண்மகனால்/மனிதனால் அப்படி செய்தல் இயலாது. உங்கள் கணவன் ஒரு உண்மையான ஆண்-மகனாய் இருத்தல் பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்லவா???
  • கணவன்-மட்டுமே வேண்டும் என்றால்; "உறவுகள் ஏதுமற்ற" ஒரு அனாதையையோ; அல்லது தன் தந்தை-வழி சொத்தில்/சுகத்தில் சுயமற்று-இருக்கும் ஒரு ஆணையோ; அல்லது எப்படியும் வாழலாம் என்றெண்ணி "ஊரை அடித்து உலையில் போடும்" ஒருவனையோ தேடிக்கண்டு பிடித்து கணவனாய் அடையலாமே?
  • "வீட்டோடு மாப்பிள்ளையாய்" இருக்க சம்மதிக்கும் ஒரு ஆணை தேடிக்கண்டுபிடித்து கணவனாய் மனமுடிக்கலாமே?! பிறகேன் "படித்த/பண்புள்ள" மாப்பிள்ளை வேண்டும் என்று தேடுகிறீர்கள்? தன் குடும்பம் மொத்தத்தையும் உதறிவிட்டு வருவதா பண்பு??

பொதுக்குறிப்பு: இப்படிப்பட்ட காரணிகளால் வளர்ந்ததுதான் "ஆணாதிக்கம்" என்பதை நினைவில் கொள்க! ஆனால், ஆணாதிக்கம் இன்று பெரும்பான்மையில் குறைந்து/அழிந்து "சமத்துவம்" நோக்கி பயணிக்கும் வேளையில் "பெண்ணாதிக்கம்" என்ற ஒன்று தலைதூக்க ஆரம்பித்து இருப்பதை என் பதிவுகளில் அவ்வப்போது எழுதி வருகிறேன். வள்ளுவனின் "இளைதாக முள்மரம் கொல்க!..." என்ற கூற்றுப்படி, இதை இப்போதே கொல்தல் மிக முக்கியம்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக