வெள்ளி, ஜூலை 31, 2015

இறந்த பின்னும் மனிதம் விதைக்கும் கலாம்...



  திரு. விஜயகாந்த் அவர்களை தேவையேயில்லாமல்; சம்பந்தமே இல்லாதவர்கள் "வடமாநிலம்"ஒன்றை சேர்ந்த ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய "ஜோக்குகள்"  போன்று இவரைப்பற்றியும் தொடர்ந்து "ஜோக்குகள்" வருவதைப் பார்க்கும்போது எனம் மனம் புழுங்கும். சில பதிவுகளில் என் மனத்தைக் கூட பிரதிபலித்து இருக்கிறேன். 

         அவரைப் பற்றி சில பhttp://vizhiyappan.blogspot.ae/2014/03/blog-post_5395.htmlதிவுகள் கூட என் வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன். அதைக் கூட வெகு-அளவில் எவரும் புரிந்து கொள்ள வில்லையே என்ற ஆதங்கம் கூட தொடர்ந்து இருந்தது. 

     திரு. கலாம் அவர்களின் இறுதி-அஞ்சலியில் திரு. விஜயகாந்த் தன் மனத்தை அப்படியே பிரதிபலித்து அழுகையாய் வெளிப்படுத்தியதைப் பாராட்டி, அவரின் குணத்தைப் புரிந்து கொண்டதைப் போன்று பலரும் எழுதி வருவதை... 

http://tamil.thehindu.com/opinion/blogs/இணைய-கலாய்ப்பாளர்களை-கலங்கவைத்த-விஜயகாந்த்/article7484879.ece 

போன்ற இணையதளங்களில் பார்ப்பது பெருத்த மகிழ்ச்சியை தருகிறது. இது மென்மேலும் தொடர வேண்டும் என்பதே என் ஆதங்கம். 

       திரு. பாலகுமாரன் அவர்கள் கூட திரு. விஜயகாந்த்தின் குணத்தைப் பற்றி உயர்வாய் பேசி இருக்கிறார். அதைக்கூட என் வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன். அவர் சொன்னது போலவே, நானும் விஜயகாந்த் ஆதரவாளன் அல்ல! ஆனால், அவரிடம் ஒரு நேர்மை இருப்பதை உணர முடிகிறது. உணர்வுகளைப் போலித்தன்மை அற்று வெளிப்படுத்துபவர்களே சிறந்த மனிதர்களாய் இருக்க முடியும். அது அவர்களின் மனிதத்தை/தனி-மனித ஒழுக்கத்தை பரைசாற்றுவதாகவே எனக்கு தெரிகிறது.

*****
அட... அட... அட...! 

என்னே ஒரு விந்தை? திரு. கலாம் அவர்கள் இறந்த பின்னும்; அவரின் இறுதி-சடங்கு நிகழ்வின் போது கூட "தனி-மனித ஒழுக்கம்/மனித-நேயம்" என்னவென்றால் என்னவென்பதை திரு. விஜயகாந்த் மூலம் - அவரைத் தேவையற்று/நியாயமற்று விமர்சிக்கும் உள்ளங்களுக்கு "ஒரு பாடமாய்" உணர்த்தி இருப்பதாய் தான் எனக்கு படுகிறது!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!

*****

இப்போதாவது மரத்துடன்-சேர்த்து; மனிதத்தையும் விதைக்க முனைவோம்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக