திங்கள், ஜூலை 27, 2015

10 வரியில் ஒரு கதை - முன்னுரை


       திடீரென ஒரு எண்ணம்; குறும்படம் போன்று ஒரு "குறுங்கதை" எழுதவேண்டும் என்று! அது சிறுகதை என்ற வட்டத்துக்குள் வரக்கூடாது என்று எண்ணினேன். அதுபோல், பாக்யா-இதழில் வெளிவருவது போல் "ஒரு பக்க கதை" என்றும் இருக்கக்கூடாது என்று தோன்றியது. பின்னர் எப்படி? என்றொரு கேள்வி எழுந்தது; ஒரு தனித்துவம் வேண்டும் என்ற பதில் வந்தது. உடனே "10 வரியில் ஒரு கதை" என்றொரு எண்ணம் உதித்தது; அது சரியெனப்பட்டது. உடனே ஒரு புது-பகுதி துவங்கி அதை "10 வரியில் ஒரு கதை" என்று தலைப்பிட்டு இந்த முன்னுரை எழுதி இருக்கிறேன். 10 வரியில் சுவராஸ்யமாய் ஒரு கதை சொல்லமுடியுமா?! என்றொரு ஐயம்; ஊடே... ஏன் எழுதமுடியாது என்ற வாதமும்! இதோ முன்னுரை எழுதி, ஒரு கதையும் எழுதி இருக்கிறேன்; சாதாரண கதைதான். ஆனால், 10 வரியில் சொல்லி இருக்கும் விதத்தில் ஒரு சுவராஸ்யம் இருக்கிறது என்று நம்புகிறேன்; நீங்களும் அப்படியே நம்புவீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக