ஞாயிறு, ஜூலை 12, 2015

மதமும்... "மாதா"வே!!!



     இந்த ஆண்டு நான் "இரமலான்-நோன்பு" இருப்பதை; இந்த வார தலையங்கத்தில் எழுதி இருக்கிறேன். என்னளவில், இப்படி நோன்பு/விரதம் இருப்பது நல்ல விசயம்; எனக்கு பிடிக்கும். என்னவோ... திடீரென்று நோன்பு இருக்கவேண்டும் என்று தோன்றியது; உடனே ஆரம்பித்து நன்முறையில் கடைபிடித்தும் வருகிறேன். அத்தலையங்கத்திலேயே... மசூதிக்கு சென்று வழிபாடு செய்யவில்லை என்றும்; அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளேன். நான் இந்த நோன்பு/விரதம் என்பதை உடல் உறுப்புகளுக்கு ஒய்வு கொடுக்கும் விசயமாய் மட்டுமே பார்க்கிறேன். பல நாட்களாய்/ஆண்டுகளாய் தொடர்ந்து, கண்டதையும் உண்டு சேர்த்திட்ட கொழுப்பை கரைக்கும் விதமாகவும் பார்க்கலாம். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி... மனதை ஒருமுகப்படுத்த இப்படிப்பட்ட நோன்பு/விரதம் உதவும். "செவிக்குண வில்லாத போழ்து" என்ற வள்ளுவன் வாக்குடன்; வயிறுமுட்ட உண்ட என் நிலையை ஒப்பிட்டு முன்பொரு கவிதை எழுதி இருக்கிறேன்!

         நட்பொருவர் "விட்டால் இசுலாமியன் ஆகிடுவாய் போல?!" என்றார்.  நான் மேற்கூறியவற்றை விளக்கி; நோன்புக்கும், கடவுள்/மதம் இவற்றிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை விளக்கினேன். தொடர்ந்து... என்னளவில் மதம் என்பது "மாதாவுக்கு சமமென்றேன். அதனால், மதம் மாறுவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை! அங்கே, உண்மையில்லை!! ஆம்! இன்னொருவரின் தாயைப் பார்த்து "அட! இந்த தாய் எவ்வளவு வியக்க வைக்கிறார் என்றோ அல்லது வேறுவகையிலோ சிலாகிக்கலாம்; தவறில்லை! ஆனால், தன் தாயை உதறிவிட்டு; அந்த தாயை, தன் தாயாய் சொந்தம் கொண்டாட எண்ணுவது மடத்தனம். தாய் என்பது எப்படி ஒருவருக்கு "மாற்ற முடியா" அடையாளமோ; அப்படித்தான் மதமும் இருக்கவேண்டும். மதத்தில் நாட்டமில்லை! மதத்தில் நம்பிக்கையில்லை!! என்ற கொள்கை-கூட எனக்கு(மு)ண்டு; ஆனால், தன் மதத்தை மாற்றிக்கொள்வது என்பது மடத்தனம்/பாவச்செயல்!!! எனவே, என்னளவில்...

மதமும், மாதாவும் ஒன்றே!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக