வெள்ளி, ஜூலை 10, 2015

ஏன் இப்படி ஒரு சர்வே எடுங்களேன்...



சற்று முன்னர் "ஆயுத எழுத நீட்சியில்" ஹரிஹரன் நடத்திய "தலைக்கவசம் அணிதல் கட்டாயம்" என்ற விதி பற்றிய விவாதத்தில் ஒரு வழக்கறிஞர் ஒருவர் இப்படி சொன்னார்:

வழக்கறிஞர்: ஒரு சர்வே எடுங்கள்! அதில் வரும் முடிவு படி தலைக்கவசம் வேண்டுமா? இல்லையா?? என்பதை முடிவு செய்யலாம் என்று வாதிட்டார்!
{சம்பந்தமே இல்லாம... எனக்கு "பாபநாசம்" படத்தில் அந்த ஐ.ஜி. மேடம் கேட்கும் "நீயெல்லாம் எப்படிய்யா போலிஸா ஆன?!" என்ற வசனம் ஞாபகத்து வந்து போனது}

ஹரிஹரன்: ஹரிஹரன் "டாஸ்மாக் கடைக்கு முன்னாடி நின்னு டாஸ்மாக் வேண்டுமா? வேண்டாமா?? என்று சர்வே நடத்தினால் சரியாய் வருமா?" என்று எதிர்கேள்வி கேட்டார்.

நான்: உடனடியாய் எனக்கு இப்படி ஒரு யோசனை எழுந்தது. துரதிஷ்டவசமாய் இன்று "வரதட்சனை ஒழிப்பு"சட்டத்தின் மூலம் பல அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுவதை தொடர்ந்து பார்த்துக்கொண்டே வருகிறோம். "வரதட்சனை ஒழிப்பு சட்டம் வேண்டுமா? வேண்டாமா?? என்று ஆண்களிடம் ஒரு சர்வே எடுங்களேன்!!!" என்பதே அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக