செவ்வாய், ஜூலை 18, 2017

குறள் எண்: 0716 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0716}

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

விழியப்பன் விளக்கம்: பல்வகை துறைகளில் கல்வி அறிவு உடையோர் முன், செய்யும் சொற்பிழை; வாழ்வியல் நெறிகளில் இருந்து தடம்புரண்டு வாழும் , ஒழுக்கமின்மைக்கு ஒப்பாகும்.
(அது போல்...)
பல்வகை உறவுகளில் அனுபவ அறிவு கொண்ட வம்சத்தில், வளர்க்கும் உறவுப்பகை; சமூகக் கடமையில் இருந்து விலகி நிற்கும், பொறுப்பின்மைக்கு நிகராகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக