வெள்ளி, ஜூலை 21, 2017

குறள் எண்: 0719 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0719}

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்

விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த நல்லோர் அவையில், பிறரொப்ப நல்லவற்றை சொல்லும் திறமுடையோர்; அறமற்றோர் நிறைந்த அவையில், மறந்தும் பேசாமல் இருப்பது சிறந்தது.
(அது போல்...)
கடமையுணர்ந்த தலைவர்கள் அணியில், மக்களொப்பச் சேவைகளைச் செய்யும் உறுப்பினர்கள்; ஊழலாளர்கள் நிறைந்த அணியில், தவறியும் சேராமல் இருப்பது உயர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக