புதன், ஜூலை 19, 2017

குறள் எண்: 0717 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0717}

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து

விழியப்பன் விளக்கம்: சொற்களைப் பிழையின்றிப் பேசும், சொல்வன்மை நிறைந்த அவையினர் முன்  பேசும்போது; பல்வகை நூல்களைக் கற்றறிந்தோரின், கல்வித்திறம் எளிதில் விளங்கும்.
(அது போல்...)
உணர்வுகளை மறைவின்றி உணர்த்தும், அறத்தன்மை மிகுந்த மக்களுடன் உறவு கொள்ளும்போது; பல்வேறு அறங்களை உணர்ந்தோரின், சகிப்புத்தன்மை எளிதில் விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக