ஞாயிறு, மார்ச் 11, 2018

குறள் எண்: 0952 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 096 - குடிமை; குறள் எண்: 0952}

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்

விழியப்பன் விளக்கம்: நல்லறம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தோர்; ஒழுக்கம்/வாய்மை/நாணுதல் - இம்மூன்றிலும் தவறிழைக்க மாட்டார்கள்!
(அது போல்...)
நல்லாட்சி அளிக்கும் கட்சியில் இருப்போர்; ஊழல்/பரிந்துரை/விதிமீறல் - இம்மூன்றிலும் நாட்டம் கொள்ளமாட்டார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக