செவ்வாய், மார்ச் 13, 2018

குறள் எண்: 0954 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 096 - குடிமை; குறள் எண்: 0954}

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்

விழியப்பன் விளக்கம்: பன்மடங்கு கோடி மதிப்புடைய சன்மானத்தைப் பெற்றாலும்; நல்லறம் மிக்க குடும்பத்தில் பிறந்தோர், அறத்தன்மை குறையும் செயல்களைச் செய்வதில்லை!
(அது போல்...)
பல்வேறு விதங்களில் இலஞ்சம் கிடைப்பதே ஆயினும்; நற்தலைமை உள்ள கட்சியில் இருப்போர், மக்களாட்சியை அழிக்கும் குற்றத்தைச் செய்வதில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக