புதன், மார்ச் 14, 2018

குறள் எண்: 0955 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 096 - குடிமை; குறள் எண்: 0955}

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று

விழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிரும் உயர்பண்பால், வறுமையில் சிக்கினாலும்; தொடர்ந்து நல்லறம் காத்த குடும்பத்தில் பிறந்தோர், அந்த பழையப் பண்பிலிருந்து விலகுவதில்லை!
(அது போல்...)
மக்களுக்காகப் போராடும் பொதுவாழ்வில், தோல்வியைச் சந்தித்தாலும்; தொடர்ந்து பொதுநலம் காக்கும் உறுதி கொண்டோர், அந்த தலைமைப் பண்பிலிருந்து விலகுவதில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக