திங்கள், மார்ச் 12, 2018

குறள் எண்: 0953 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 096 - குடிமை; குறள் எண்: 0953}

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு

விழியப்பன் விளக்கம்: நல்லறம் மிக்க குடும்பத்தில் பிறந்தோர்க்கு; புன்னகை செய்வது/பெற்றதைப் பகிர்வது/நற்சொல் பேசுவது/இகழ்ந்து பேசாதது - இந்நான்கும், இயல்பான குணங்களாகும்!
(அது போல்...)
நற்சிந்தனை விதைக்கும் கட்சியைத் தொடர்வோர்க்கு; சேவை செய்வது/உரிமையைப் பகிர்வது/நற்செயல் செய்வது/தாழ்ந்து போகாதது - இந்நான்கும், சிறப்பான காரணிகளாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக