சனி, மார்ச் 10, 2018

குறள் எண்: 0951 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 096 - குடிமை; குறள் எண்: 0951}

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு

விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தோரைத் தவிர்த்து, மற்றவர்களிடம்; இயற்கையான நடுநிலையும்/நாணுதலும் ஒன்று சேர்ந்து இருப்பதில்லை!
(அது போல்...)
நேர்மையான கட்சியில் இருப்போரைத் தவிர்த்து, மற்றவர்களிடம்; உண்மையான பொதுநலனும்/ஆளுமையும் ஒன்றாக இணைந்து அமைவதில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக