புதன், மார்ச் 21, 2018

குறள் எண்: 0962 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 097 - மானம்; குறள் எண்: 0962}

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்

விழியப்பன் விளக்கம்: புகழுடன் சேர்த்து, அதிவலிமையான குடும்பமும் பெற வேண்டுவோர்; சிறந்த புகழ் அளிப்பினும், குடும்பத்தின் மாண்பைக் கெடுப்பவற்றைச் செய்யமாட்டார்கள்!
(அது போல்...)
அறத்துடன் சேர்த்து, அதிசக்தியான மக்களாட்சியையும் நிலைநாட்ட முனைவோர்; பெருத்த ஆதாயம் கிடைப்பினும், மக்களின் மகிழ்ச்சியை அழிப்பவற்றைச் செய்யமாட்டார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக