ஞாயிறு, மார்ச் 18, 2018

குறள் எண்: 0959 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 096 - குடிமை; குறள் எண்: 0959}

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

விழியப்பன் விளக்கம்: நிலத்தின் கீழுள்ள விதையின் வீரியத்தை, மேலுள்ள பயிர் உணர்த்தும்! அதுபோல் ஒருவர் பிறந்த குடும்பத்தின் உயர்வை, அவரின் வாய்ச்சொல் உணர்த்தும்!
(அது போல்...)
மனதின் அகத்திலுள்ள சிந்தனையின் தன்மையை, புறத்திலுள்ள முகம் வெளிப்படுத்தும்! அதுபோல் ஒருவர் சார்ந்த கட்சியின் கொள்கையை, அவரின் சமூகசிந்தனை வெளிப்படுத்தும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக