வெள்ளி, மார்ச் 16, 2018

குறள் எண்: 0957 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 096 - குடிமை; குறள் எண்: 0957}

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

விழியப்பன் விளக்கம்: வானத்தின் நிலவில் இருக்கும் இருள் போல்; நல்லொழுக்கம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் இருக்கும் தவறுகள், பிரம்மாண்டமாய் தெரியும்!
(அது போல்...)
வெள்ளைத்தாளின் மத்தியில் இருக்கும் கரும்புள்ளி போல்; அறச்சிந்தனை மிக்க கட்சியின் உறுப்பினரிடம் உருவாகும் ஊழல்கள், இழிவாய் உருமாறும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக