சனி, நவம்பர் 04, 2017

குறள் எண்: 0825 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 083 - கூடா நட்பு; குறள் எண்: 0825}

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று

விழியப்பன் விளக்கம்: மனதோடு இணையாத ஒருவரின் கூடா நட்பை; எவ்வொரு விடயத்திலும், அவரின் சொல்லை நம்பி தெளிவடைதல் கூடாது!
(அது போல்...)
மக்களோடு இணையாத ஒருவரின் முறையற்ற தலைமையை; எந்தவொரு நிலையிலும், அவரின் பிரச்சாரத்தை நம்பி பின்தொடர்தல் கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக