செவ்வாய், நவம்பர் 21, 2017

குறள் எண்: 0842 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0842}

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்

விழியப்பன் விளக்கம்: நட்பியல் ஞானம் இல்லாதவர், மனம் உவந்து கொடுப்பது; அதைப் பெறுபவர் செய்த தவத்தால் விளைவதே அன்றி, வேறெதுவும் இல்லை!
(அது போல்...)
அரசியல் அறம் இல்லாதவர், கையூட்டு வாங்காமல் செய்வது; அப்பயனை அடைபவர் நடத்திய போராட்டத்தின் வெற்றியே அன்றி, வேறொன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக