செவ்வாய், நவம்பர் 28, 2017

குறள் எண்: 0849 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0849}

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு

விழியப்பன் விளக்கம்: பகுத்தறிதலை அறியாதோர், தான் அறிந்த வண்ணமே அறிவர் என்பதால்; பகுத்து அறியாதோரை அறியவைக்க முயல்வோரும், அறியாதோர் என்றே உணரப்படுவர்!
(அது போல்...)
நட்பறிதலைப் பழகாதோர், தாம் பழகிய வண்ணமே பழகுவர் என்பதால்; நட்பைப் பழகாதோரைப் பழகவைக்க முயல்வோரும், பழகாதோர் எனவே கருதப்படுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக