வியாழன், நவம்பர் 30, 2017

குறள் எண்: 0851 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0851}

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்

விழியப்பன் விளக்கம்: அனைத்து விதமான உயிரினங்கள் இடையே இருக்கும், பிரிவினை என்பது; இணையாமை என்னும் பண்பற்ற எண்ணத்தை வளர்க்கும், நோயே ஆகும்!
(அது போல்...)
எல்லா வகையான கட்சிகளும் இறுதியில் அடையும், சாபம் என்பது; பொதுமை என்னும் மக்களாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும், விரோதமே ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக