செவ்வாய், நவம்பர் 14, 2017

குறள் எண்: 0835 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0835}

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு

விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமை கொண்டோர்; முதல் பிறவியிலேயே; ஏழு பிறப்புகளுக்கும் நரகத்தில் தள்ளும் செயல்களை, செய்யும் ஆற்றலுடையோர் ஆவர்!
(அது போல்...)
வேலையில் அறமின்மை உடையோர், வாரத்தின் முதல்நாளே; ஏழு நாட்களுக்கும் விரக்தியில் ஆழ்த்தும் சோம்பலை, கொள்ளும் திறமுடையோர் ஆவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக