வெள்ளி, நவம்பர் 24, 2017

குறள் எண்: 0845 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0845}

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்

விழியப்பன் விளக்கம்: கற்றறியாத விடயங்களிலும், பொய்யறிவுப் போர்வையோடு ஒழுகுதல்; தாம் குழப்பமின்றி கற்று, வல்லமையடைந்த விடயங்களின் மேலும் ஐயத்தை உருவாக்கும்!
(அது போல்...)
செய்யாத திட்டங்களையும், பொய்பிரச்சார அரசியலோடு அணுகுதல்; அவர்கள் ஊழலின்றி செய்து, வெற்றியடைந்த திட்டங்களின் மீதும் அவநம்பிக்கையை அளிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக