வியாழன், நவம்பர் 23, 2017

குறள் எண்: 0844 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0844}

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறிவின்மை எனப்படுவது என்னவெனில்; "யாம் அறிவுடையோர் ஆவோம்!" எனத் தாமே அறிவித்துக் கொள்ளும் ஆணவம் ஆகும்!
(அது போல்...)
அரசியலில் திறமின்மை என்பது யாதெனில்; “யாம் நிரந்தரமாய் ஆள்வோம்!” எனத் தொண்டர்களை அறிவிக்க வைக்கும் செருக்கு ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக