வெள்ளி, நவம்பர் 17, 2017

குறள் எண்: 0838 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0838}

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்

விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமை கொண்டவரிடம், அதிக மதிப்புடைய பொருள் கிடைத்தால்; அவரின் நிலைமை, பித்தம் உடையவர் ஒருவர் மதுவருந்தியது போலிருக்கும்!
(அது போல்...)
பிரிவினையில் பிரம்மை கொண்டவரிடம், அதீத சக்தியுடைய அதிகாரம் கிடைத்தால்; அவரின் செயல்கள், கூர்மையான ஆயுதத்தில் நஞ்சை கலந்தது போலிருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக