சனி, நவம்பர் 18, 2017

குறள் எண்: 0839 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0839}

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்

விழியப்பன் விளக்கம்: பிரிந்து செல்லும்போது, துன்பமளிக்க எதுவொன்றும் இல்லை என்பதால்; அறியாமை கொண்டோரிடம் கொள்ளும் நட்பு, மிகவும் இனிமை ஆனதாகும்!
(அது போல்...)
வெறுத்து கைவிடும்போது, சோம்பலளிக்க எதுவும் இல்லை என்பதால்; போதைப் பழக்கங்களில் கொள்ளும் நாட்டம், அதிக ஒவ்வாமை உடையதாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக