வியாழன், நவம்பர் 16, 2017

குறள் எண்: 0837 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0837}

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமையுள்ள ஒருவரிடம், பெருமளவு செல்வம் சேரும்போது; அவர்களுக்கு தொடர்பற்றோரும் பசியாற, அவர்களின் சுற்றத்தார் பசித்திருப்பர்!
(அது போல்...)
அரசியலில் பொய்மையுள்ள ஒருவரிடம், அதிகளவு ஆட்சியதிகாரம் சேரும்போது; எதிர்க்கட்சியும் ஊழலால் பயனடைய, வாக்களித்த மக்கள் அல்லாடுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக