திங்கள், நவம்பர் 27, 2017

குறள் எண்: 0848 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0848}

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்

விழியப்பன் விளக்கம்: பிறர் சொல்லவும் செய்யாது, தாமாகவும் தெளியாத ஒருவருக்கு; அந்த பொய்யறிவு என்பது, அவர்களின் உயிர் பிரியும் வரையிருக்கும் நோயாகும்!
(அது போல்...)
மக்கள் பணியையும் செய்யாது, பதவியையும் துறக்காதக் கட்சிக்கு; அந்த சிக்கல் என்பது, அவர்களின் ஆட்சி முடியும் வரையிருக்கும் குறையாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக