திங்கள், நவம்பர் 13, 2017

குறள் எண்: 0834 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0834}

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

விழியப்பன் விளக்கம்: நட்பியல் சார்ந்த நூல்களைக் கற்றுணர்ந்தும்/பிறருக்கு எடுத்துரைத்தும்; தாம் பின்பற்றாத அறியாமை நிறைந்தோரை விட, அதீத அறியாமை கொண்டோர் எவருமில்லை!
(அது போல்...)
அரசியல் சார்ந்த அறங்களை அறிந்தும்/பிறருக்குக் கற்பித்தும்; தாம் பழகிடாத கொடுங்கோன்மை நிறைந்தோரை விட, அதிக கொடுங்கோன்மை உடையோர் எவருமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக