ஞாயிறு, நவம்பர் 26, 2017

குறள் எண்: 0847 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0847}

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு

விழியப்பன் விளக்கம்: கிடைக்கற்கரிய உபதேசங்களைப் பெற்றும், அவற்றைப் பின்பற்றத் தவறும் அறிவு இல்லாதோர்; தமக்குத் தாமே, பெருந் துன்பங்களைச் செய்துக்கொள்வர்.
(அது போல்...)
காண்பதற்கரிய தலைவர்களைக் கண்டும், அவர்களைத் தொடரத் தவறும் அரசியல் அறமற்றோர்; தமக்குத் தாமே, அதீத தோல்விகளை வகுத்துக்கொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக