புதன், பிப்ரவரி 28, 2018

குறள் எண்: 0941 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 095 - மருந்து; குறள் எண்: 0941}

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

விழியப்பன் விளக்கம்: உணவோ/உறக்கமோ, மிகுந்தாலோ/குறைந்தாலோ; மருத்துவம் கற்றோர் குறிப்பிடும், வாதத்தில் துவங்கி பித்தம்/சீதம் வரையிலான மூன்று நோயை உருவாக்கும்!
(அது போல்...)
சிந்தனையோ/செயலோ, சிதைந்தாலோ/குறைந்தாலோ; குறளெழுதிய வள்ளுவர் குறிப்பிடும், அறத்தில் துவங்கி பொருள்/இன்பம் வரையிலான மூன்று பாலைப் பாதிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக