ஞாயிறு, மார்ச் 02, 2014

ஐபேடும்; என்மகளும்...



    சென்றமுறை என்மகள் அபு-தாபி வந்திருந்தபோது - அவளுக்கு "Lenova Tab" ஒன்று வாங்கிக்கொடுத்தேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது! அதை, அவளும் ஒழுங்காய் பாதுகாத்து வருகிறாள். என்னுடைய "iPad Mini"யை அவ்வப்போது அவள் கேட்பது வழக்கம்; நானும், எந்த மறுப்பின்றி கொடுப்பேன். அவளும், அதை ஜாக்கிரதையாய் கையாண்டு திரும்பக் கொடுத்து விடுவாள். என்தமக்கை கூட; என்மகள் அதை கையாளும்-விதத்தை பார்த்துவிட்டு "விழியை விட வயசான பசங்க கூட, அதை லொட்டு-லொட்டுன்னு தட்டி-தாண்டா விளையாடுதுங்க! ஆனா, விழி அதை அவ்வளவு மென்மையாய் செய்யுதுடா!" என்று புகழாகரம் சூட்டினார். ஆனால், என் மனதுள் "பின்ன?! என்னவள் எனக்கு வாங்கிக்கொடுத்த Samsung Omina-IIவை; Stylus-ஐ வச்சு குத்தி-குத்தியே வீனடித்தவல் அல்லவா??!!" என்று  ஓடியது. ஒவ்வொரு முறையும், அவளை கண்டித்து சொல்லிக்கொடுத்த விசயம் எனக்கல்லவா தெரியும்?! என்று எண்ணினேன். ஆனாலும், என்தமக்கையிடம் அதை கூறவில்லை!

      ஓர்நாள் என்தமக்கை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தபோது "iPad Mini"ஐ கீழே போட்டுவிட்டாள்! அருகிலேயே இருந்ததால், உடனே கவனித்து விட்டேன்; நான் பார்த்துவிட்டேன் என்று தெரிந்ததும் "உடனே! அழ ஆரம்பித்துவிட்டாள்; வழக்கத்திற்கு மாறாய் கண்ணில்-கண்ணீர் வேறு!!" நான் ஒன்றுமே சொல்லவில்லை; சிறிதாய் அதட்டக்கூட வில்லை! சரிம்மா! பரவாயில்லை விடு என்றேன். அவள் "ஸாரி ப்பா!" என்றாள்; அவளை இறுகி-அணைத்துகொண்டு பரவாயில்லை விடும்மா என்றேன். இப்போது என் மனதுள் இப்படி தோன்றியது: "உன்னைவிடவாடி?! 20,000 உரூபாய் பொருள் எனக்கு பெரிது; விடுடி குட்டி!" என்று சொல்லவேண்டும் போல் தோன்றியது; ஆனால், என்மகளிடம் அப்படி சொல்லவில்லை. "தன்னப்பன் - ஒரு பொருளை வீணடித்தால் அடிப்பான்!" என்ற எண்ணம் போதும்; அவளை தண்டிக்கவேண்டிய அவசியம் இல்லை! மேலும் அவள் வெண்டுமென்று அப்படி செய்யவில்லை. நாம்... தெரிந்தே கோபத்தில் பல பொருட்களை போட்டுடைக்கும்போது...

நம் மழலைகள் தெரியாமல் சில-பொருட்களை உடைப்பதில் எந்த தவறுமில்லை!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக