சனி, டிசம்பர் 02, 2017

குறள் எண்: 0853 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0853}

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்

விழியப்பன் விளக்கம்: பிரிவினை என்னும் இன்னலளிக்கும் நோயை நீக்கினால்; அது, என்றுமழியாத  நிலைத்த புகழை அளிக்கும்.
(அது போல்...)
போதை எனும் செயலழிக்கும் நஞ்சைக் களைந்தால்; அது, எந்நிலையிலும் சிதையாத அமைதியை அளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக