வியாழன், டிசம்பர் 28, 2017

குறள் எண்: 0879 (விழியப்பன் விளக்கவுரை)


{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0879}

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

விழியப்பன் விளக்கம்: பயனற்ற முள்மரத்தை, இளையதாக இருக்கும் போதே வேரறுக்க! வளர்ந்து முதிர்ந்த நிலையில், அதை களைய முற்படுவோரின் கையைக் காயப்படுத்தும்!
(அது போல்...)
அறமற்ற தீக்குணத்தை, வளர ஆரம்பிக்கும் போதே அழிக்க! வளர்ந்து ஆக்கிரமித்த நிலையில், அதை அழிக்க முற்படுவோரின் வாழ்க்கையை அழிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக