சனி, டிசம்பர் 23, 2017

குறள் எண்: 0874 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0874}

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு

விழியப்பன் விளக்கம்: பகையையும் நட்பாக்கிக் கொண்டு செயல்படும், தகைமைப் பண்புடையோரின்; ஆளுமையின் கீழ், உலகம் நிம்மதியாய் இயங்கும்.
(அது போல்...)
தோல்வியையும் அனுபவமாய் ஏற்று வழிநடத்தும், உயர்வானக் குணமுடையோரின்; தலைமையின் கீழ், குடும்பம் நேர்மையாய் வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக