ஞாயிறு, டிசம்பர் 24, 2017

குறள் எண்: 0875 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0875}

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று

விழியப்பன் விளக்கம்: இருவேறு பகைகளை எதிர்க்கும்போது, தமக்கு துணை இல்லாது போனால்; ஒருவர், அவ்விரு பகைககளில் சரியான ஒன்றை, இனிய துணையாக்கிட வேண்டும்!
(அது போல்...)
இருவகை தீப்பழக்கங்கள் இருக்கும்போது, தம் உடல்திடம் குறைந்து போனால்; ஒருவர், அவ்விரு தீப்பழக்கங்களில் வீரியமான ஒன்றை, முயன்று நிறுத்திட வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக