திங்கள், டிசம்பர் 11, 2017

குறள் எண்: 0862 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0862}

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு

விழியப்பன் விளக்கம்: சுற்றத்திடம் அன்பின்றி/வலிமையான துணையின்றி/தானும் வலிமையின்றி - இருக்கும் ஒருவன்; எதிர்த்து வரும் பகைவரின் வலிமையை, எவ்வாறு எதிர்கொள்வான்?
(அது போல்...)
சிந்தனையில் நாட்டமின்றி/பகுத்தறியும் குருவின்றி/தானும் பகுத்தறிவின்றி - இருக்கும் ஒருவன்; வாழ்வில் வரும் சவால்களின் பாதிப்பை, எப்படி சமாளிப்பான்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக