ஞாயிறு, டிசம்பர் 17, 2017

குறள் எண்: 0868 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0868}

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து

விழியப்பன் விளக்கம்: நற்குணம் ஏதுமின்றி/பல்வேறு குற்றங்களைச் செய்யும் ஒருவன், அனைத்து துணைகளையும் இழப்பான்; அதுவே, பகைவர்களின் வெற்றிக்கு துணை புரியும்!
(அது போல்...)
நீர்ப்பாசனம் ஏதுமின்றி/பல்வகைக் குறைகளுடன் இருக்கும் நிலம், எல்லா வளங்களையும் அழிக்கும்; அதுவே,  தொழிற்சாலைகளைப் பெருக்கி விவசாயத்தை அழிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக